Monday 22 June 2009

கண்ணாடி குடுவை

பஜாரில் இருந்து
கண்ணாடி குடுவை
வாங்கி வந்தேன்
வரவேற்பறைக்காய்

இருமுறை உடைக்கப்பட
போய் - காப்பற்றி
மேசை மீது
உயிரோடு வைத்தேன்

பாதுகாக்க எண்ணி
பரண் மீது வைக்கப்போனேன்

வரவேற்பறைக்கு தானே
வாங்கினாய் என்னை;
பரண் மீது கொண்டு
வைக்காதே
என்று கூக்குரலிட்டது
ஜாடி..

நான் கேட்கவில்லை
கைதவறி தரை பார்த்து ஜாடி
பல நூறு துண்டுகளாய்
அழவில்லை நான்..


எனது கம்பெனி வலைபூவிலிருந்து

1 comment: