Saturday 13 June 2009

ஒன்றாய் பிரிந்திருக்கிறோம்….

எனக்கு தெரியும்
உன் காயங்களும்
என் முத்தங்களும்

உனக்கு தெரியும்
என் அழுகையும்
உன் ஆற்றாமைகளும்

நமக்கு தெரியும்
உன்னில் இருக்கும்
என்னையும்
என்னில் மூழ்கி
திளைக்கும்
உன்னையும்

நாம் களியாடிய
கட்டில்
இறந்து போய்
வெறும் மரமாய்

வாங்கி வரும் முல்லை
பூவில் பாதி சாமிக்கு
உனக்கு வைக்கும்
மீதி, எடுக்கபடாமலே
சமையற்கட்டில்
வாடி போய்…

என் வாகன
இருக்கை கைபிடிக்கு
வலிக்கிறதாம்
என் தோள்
சுமந்த சுகம்
அதற்க்கு வலியாய்

ஓர் அழைப்பில்
அடங்கிய பதில்
வாரா குறுந்தகவல்
கோபங்கள் எல்லாம்
ஏக்கங்களோடு
காத்திருக்கின்றன
உன் ஒரு குறுந்தகவலுகாய்…


கவிதை வடிக்க தெரியா
நான் எழுதின
ஒரு முத்தக்கவிதை
ஏங்குகிறது
உன் இதழ்மேல் எழுதப்பட…

பிரிந்து ஒன்றாய் இருந்தோம்
நாம்;
இன்று ஓரறையில்
ஒன்றாய் பிரிந்திருக்கிறோம்
நாம்…


4 comments:

  1. nice one dear....
    வாரா குறுந்தகவல் --- varaaa..... acchupizhai....

    yeda note pannom paatha illa

    ReplyDelete
  2. Hey Suba good to see you extending your reach to newer dimension...

    Wishing u all the very best da :-)

    ReplyDelete
  3. suzhiyam said...

    ///ஓர் அழைப்பில்
    அடங்கிய பதில்
    வாரா குறுந்தகவல்
    கோபங்கள் எல்லாம்
    ஏக்கங்களோடு
    காத்திருக்கின்றன
    உன் ஒரு குறுந்தகவலுகாய்…///


    மீளா காத்திருப்பின் வலி ஒரு கரையை போல படிந்த வரிகள்

    ReplyDelete